DO YOU ENJOY THIS MY WEBSITE?

Thursday, January 13, 2011

SWEET PONGAL WISHES TO ALL MY DEAR FRIENDS...

 January 14, 2011

 

Dear Friends….

 

MY HEARTEDLY SWEET PONGAL WISHES TO ALL OF YOU…

 

Pongal 08 02

 

Pongal 08 04

 

Pongal 08 01

 

Pongal 08 03

 

 

S. P. MUTHURAMALINGAM | JM – CIVIL

TVS Srichakra Limited, Perumalpatti Road,

Vellaripatti, Melur Taluk, Madurai – 625 122.

' 0452-2 420 461, 70452-2 420 266.

& +91 80123 08234

) mail2spm@yahoo.com

1

Save Water, Energy, Trees and Save Earth

 

Wednesday, January 12, 2011

பொங்கலோ பொங்கல் !

Image removed by sender.

பொங்கலோ பொங்கல் !

vayal | ஜனவரி 13, 2011 at 5:22 மு.பகல் | Categories: Uncategorized | URL: http://wp.me/pewfk-2j1

Image removed by sender.

விக்ரக வழிபாட்டுக்கு முன்னதாக, மனிதனுக்கு ஒளியே தெய்வமாக இருந்தது. இருளைக் கண்டு பயந்த மனிதன், சூரியன் உதயமானதும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்; அந்த சூரியனையே தெய்வமாக எண்ணினான். சூரியனுக்காக தனி மதமும் தோன்றியது. இந்து மதம் முற்காலத்தில் ஆறு பிரிவுகளாக இருந்தது. விநாயகரை வணங்குவோர் கணாபத்யம், சிவனை வணங்குவோர் சைவம், விஷ்ணுவை வணங்குவோர் வைஷ்ணவம், சக்தியை வணங்குவோர் சாக்தம், முருகனை வணங்குவோர் கவுமாரம், சூரியனை வணங்குவோர் சவுரம் ஆகிய மதப் பிரிவுகளைக் கொண்டிருந்தனர். இவர்களை இணைத்தே இந்து மதத்தை உருவாக்கினார் ஆதிசங்கரர். சூரியனுக்கென்று தனி மதமே இருக்குமளவு அவர் புகழ் பெற்றவராக விளங்கினார். அவரே முழுமுதல் கடவுள் என்று சவுர மதத்தைப் பின்பற்றியவர்கள் நம்பினர். விநாயகரையும், சூரியனையும் ஒன்றுபடுத்தியும் சில கருத்துக்களைச் சொல்லலாம். சூரியனுக்கு ஒரிசா மாநிலம் கோனார்க்கில் கோவில் இருக்கிறது. கோணம் + அர்க்கம் என்று இதைப் பிரிப்பர். "அர்க்கன்' என்றால், "சூரியன்!' "கோணம்' என்றால், "பகுதி!' "சூரியனுக்குரிய இடம்' என்று இதற்கு பொருள் கொள்வர். "அர்க்கம்' என்ற சொல்லுக்கு, "எருக்கு' என்றும் பொருள் உண்டு. விநாயகருக்கு பிடித்தமான மலர் எருக்கு. அவருக்கு சதுர்த்தியன்று எருக்கம்பூ மாலை அணிவிக்கலாம். சூரியனுக்கு பிடித்தமான இலையும் எருக்கு தான். கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில் தான், இன்று இந்தியாவிலேயே சூரியனுக்காக பழுதுபடாத நிலையிலுள்ள கோவில். இங்கே, எருக்கு தான் தல விருட்சம். எருக்கம் இலையில் தயிர்சாதம் வைத்து சாப்பிட்டு, நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட குஷ்டநோய் நீங்கியது என்று சூரியனார்கோவில் தல வரலாறு தெரிவிக்கிறது. சூரியனின் ஒளியில் இருந்து தான் தாவரங்கள் உணவைத் தயாரிக்கின்றன. சூரிய வெளிச்சமில்லாத இடத்தில், விதை போட்டால் முளைப்பதில்லை. சூரியனிடமிருந்து மனிதனால் உயிர் வாழ்வதற்குரிய சத்தை நேரடியாகப் பெற முடியாது என்கிறது அறிவியல். ஆனால், அவை தாவரங்கள் மூலமாக மனிதனுக்கு கிடைத்து விடுகின்றன. சூரிய வெளிச்சத்தின் உதவியோடு வளரும் தானியங்கள், காய், பழங்கள், மனிதனுக்கு உணவாகின்றன. இதற்குள் இருக்கும் சூரிய சக்தி தான் மனித உடலுக்குள் சென்று உயிர்வாழும் சக்தியையே தருகிறது. ஆனால், சூரிய சக்தியை காயத்ரி மந்திரம் மூலம் பெற முடியும் என, சாஸ்திரங்கள் கூறுகின்றன. காயத்ரி மந்திரம் சொல்பவர்களுக்கு தேகசக்தி, புத்திசக்தி, ஆன்மிகசக்தி ஆகியவை கிடைக்கின்றன. காயத்ரி மந்திரத்தை சொல்ல முடியாவிட்டாலும் கூட, அதை சுத்தமான உடல், மனதுடன் கேட்டாலே போதும். இந்த சக்திகள் நம்மை வந்தடைந்து விடும். சிறப்பு மிக்க சூரிய பகவானுக்குரிய தினமே பொங்கல். இந்நாளில், நமக்கு உணவளிக்கும் வள்ளலுக்கு, பொங்கலிட்டு நன்றி தெரிவிக்க வேண்டும். வீட்டுக்குள் பொங்கலிடும் புதிய நடைமுறையை மாற்றி, முன்பு போல, ஊரே ஒன்று கூடி, "பொங்கலோ பொங்கல்' என முழக்கமிட்டு, வீட்டு வாசலில் பொங்கலிடுவதன் மூலம் சூரிய பகவானுக்கு முறையாக மரியாதை செய்ய வேண்டும். ***

இப்பதிவிற்கு ஒரு மறுமொழி இட

Thursday, December 30, 2010

நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்

நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்


முஸ்கி : ஒரு ஏழை விவசாயி ஸ்டெப் எடுத்திருக்கான் - நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப்பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
கடந்த 23-ம் தேதிகொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.. பெரியண்ண அரசு தலமையில் இலவசவண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழாநடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர்வாசிக்கப்பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியைவாங்கிக் கொண்டார் . ஒரு விநாடி அங்கே நின்றவர், டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார். ஏதோ கோரிக்கை மனுகொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப்படித்தார்.
அதில்மனிதனுக்கு டி.வி. என்பதுபொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் வாழ அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவைன்னிறைவு அடைந்துவிட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்துவிட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழஙகும் பணத்தை வைத்துவிவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒருமாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனைமின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார்வரை அனைத்தையும் வாங்கிக்கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோஅதை நாங்களேபூர்த்திசெய்துதன்னிறைவு அடைந்துவிடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர்பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்காகுறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந டி.வி. வேண்டாம். முதல்வர்கருணாநிதி மீதுஎனக்கு மிகுந்தமதிப்பும், மரியாதையும், அன்பும்உள்ளது.
எனவே, இந்த டி.வி.யை அவருக்கேஅன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர் ப்பத்தைப்பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்தமனு.
இதைப் படித்தபெரியண்ண அரசுமுகத்தில் ஈயாடவில்லை.அருகில்இருந்த
திகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.ி.யையும் வாங்கிவைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல்
விஜயகுமாரை அனுப்பிவைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் கூறியது .
நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின் வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன் கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும் ,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் ன் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியிலபடுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு. ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடிகுடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப ட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடியவயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி .? அவன் பொழப்பே சிரிப்பா
சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்துவே சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யைதிருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்தகையோடு முதல்வர்கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில்கொத்தமங்கலத்துக்கு வந்தடி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்பரிசாகநீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம்
இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம்தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார்
பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்ககும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரைபாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

நன்றி - வெளிச்சம்

Sunday, December 26, 2010

பசி போக்குவோம் ! - டிச., 28 - மதுரையில் படியளந்தருளிய லீலை!

பசி போக்குவோம் ! - டிச., 28 - மதுரையில் படியளந்தருளிய லீலை!

vayal | December 27, 2010 at 5:10 மு.பகல் | Categories: ஆன்மீகம் | URL: http://wp.me/pewfk-2g5

மார்கழி அஷ்டமியன்று மதுரை மீனாட்சியம்மன் கோவி லில் நடக்கும் படியளந்தருளிய லீலை நிகழ்ச்சி சிறப்பானது. கண்ணுக்குத் தெரியாத உயிர்களில் இருந்து மனித இனம் வரை, எல்லாருக்குமே ஆண்டவன் படியளக்கிறான். சிலருக்கு பெரும் பணத்தைக் கொடுத்திருக்கிறான். அது, அவர்களுக்காக மட்டுமல்ல, இல்லாதவர்களுக்கும் கொடுத்து உதவட்டுமே என்பதற்கும்தான். பசியுள்ள ஒருவனிடம் ஆன்மிகத்தைப் போதித்தால், அவனது காதுகளில் அது ஏறாது. முதலில் சாப்பாடு... பின்பு அவனிடம் என்ன சொன்னாலும் கேட்பான்.
உயிர்கள் பசியின்றி இருக்க தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விழாவே இது.
ஒரு கதை மூலம் இதை விளக்கலாம்... ஒரு ஏழை, கடும் பசியுடன் திரிந்தான். வழியில் ஒரு மாந்தோப்பு தென்பட்டது. பழங்கள் கண்ணைக் கவரும் வகையில் தொங்கின. தோட்டத்துக்குள் புகுந்து விட்டான் அந்த ஏழை. அது, அரசருக்குரிய தோட்டம் என்பது அவனுக்குத் தெரியாது. பசி வேகம் கண்ணை மறைக்க, கல்லை விட்டெறிந்தான்; பழம் கீழே விழுந்தது. ஆர்வமாக பழத்தைச் சாப்பிட்டான் அவன். ஆனால், வீசி எறிந்த கல், சற்று தூரத்தில், தன் மனைவியருடன் மரத்தடியில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த அரசனின் தலையில் விழுந்தது. நல்ல வேளையாக அரசர் கிரீடத்துடன் இருந்ததால் தப்பித்தார். அவர், அதை பெரிதுபடுத்தவும் இல்லை. ஆனால், அங்கே காவலுக்கு நின்றவர்கள், அரசரிடம் நற்பெயர் பெறுவதற்காக உடனடி நடவடிக்கை எடுத்தனர். பழம் தின்று கொண்டிருந்த ஏழையைப் பிடித்து வந்து அமைச்சரிடம் நிறுத்தினர். அவர், அவனுக்கு மரணதண்டனை விதித்தார். இந்த தகவலை மன்னரிடம் ஓடோடி வந்து சொல்ல, மன்னர் அவனை தன் முன்னால் கொண்டு வரும்படி சொன்னார். அவனை இழுத்து வந்தனர். அவன் கல் வீசியதற்கான காரணம், பசி என்பதை புரிந்து கொண்டார். அவனை விடுவிக்கச் சொன்னார் அரசர். "அமைச்சரே... அறிவே இல்லாத இந்த மரம் கூட ஒரு கனியைக் கொடுத்து, இந்த மனிதனின் பசியைப் போக்கியிருக்கிறது. அறிவுள்ள ஜீவன்களான நாம், நம் நாட்டிலுள்ள இவனைப் போன்ற மக்களின் வறுமையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இவனை விடுதலை செய்யுங்கள். இனி, ஏழைகளே இந்நாட்டில் இருக்கக்கூடாது. அவர்களைக் கணக்கெடுத்து உரிய பணி கொடுத்து பசியை விரட்டுங்கள்...' என உத்தரவு போட்டார்.
பார்வதிதேவிக்கும், பரமேஸ்வரனுக்கும் ஒருமுறை வாக்கு வாதம் வந்தது. "நீங்கள் எல்லாருக்குமே படியளப்பதாக சொல்கிறீர்களே... இதோ... இந்த செப்புக்குள் ஒரு எறும்பை விடுகிறேன். இதற்கு எப்படி படியளக்கிறீர்கள் என பார்க்கலாம்...' என்றாள். சிவன், அந்த செப்பை திறந்து பார்க்கச் சொன்னார். செப்பின் ஓரத்தில் ஒரு அரிசித் துகள் கிடந்தது. அதை, எறும்பு வாயில் கவ்விக் கொண்டிருந்தது. இவ்வாறாக, உயிர்களின் பசி போக்குவதை இறைவன் தன் கடமையாகக் கொண்டுள்ளது போல, நாமும் பிறர் பசி போக்க வேண்டும் என்பதை உணர்த்த பவனி வருவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர். அந்த சப்பரத்தில் நெற்கதிர்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் இருந்து சிந்தும் நெல்மணிகளை சிறு உயிர்கள் எடுத்துக் கொண்டு உயிர் வாழும். இந்த நன்னாளில், பசியில்லாத உலகம் அமைய அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வேண்டுவோம். ***

இப்பதிவிற்கு ஒரு மறுமொழி இட